இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வீதியை விட்டு விலகிய மோட்டார் சைக்கிளால் இருவர் படு காயம்

நேற்று (ஜூன் 17) லுணுகலை பசறை வீதியில் ஹொப்டன் 154 ஆவது மைல் கல்லுக்கருகே மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதில் இருவர் பலத்த காயமடைந்துள்ளார்கள்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை அசேலபுர மற்றும் ஹிந்தகொட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் காயமடைந்தவர்கள் ஹொப்டன் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க