உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு மோடி அழைப்பு

இந்திய பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும் எதிர்வரும் 08 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இடம்பெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கு பல வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தெரிவானமைக்கு மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்ஸு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாலைத்தீவு ஜனாதிபதிக்கும் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க