உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் 28 பேரை காவு கொண்ட கோர விபத்து

பாகிஸ்தான் கராச்சி நகரிலிருந்து துர்பத் முதல் குவெட்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து வாசுக் நகருக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
பேருந்தில் பயணித்த குழந்தைகள், பெண்கள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தானது பேருந்து சாரதியின் அதிவேகம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் பேருந்தின் டயர் வெடித்ததினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க