இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

கொள்ளுப்பிட்டிய தனியார் வைத்தியசாலையில் தீ பரவல்

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று (மே 24) ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் நேற்று (24) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பிவைத்துள்ளதோடு தீ முற்றாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க