புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ரசிகர்களுக்காக தோனி இதனை செய்ய வேண்டும்- சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் போட்டியானது கடந்த மே 18 அன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இதில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது.

இந்த தொடரில் 42 வயதான சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் காரணமாக நிச்சயம் தோனி அடுத்த சீசனிலும் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தோனி இன்னும் 5 ஆண்டுகளோ அல்லது குறைந்தது 2-3 வருடங்களாவது ரசிகர்களுக்காக விளையாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க