இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நிதி இராஜாங்க அமைச்சருக்கு உயிர் அச்சுறுத்தல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (மே 15) நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் அலுவலகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பினில் எதிர்வரும் தேர்தலுக்கு முன்வர அனுமதிக்கப்போவதில்லை என்றும் தன் அச்சுறுத்தலை புறக்கணிக்கும் பட்சத்தில் இராஜாங்க அமைச்சரை கொலை செய்து விடுவதாகவும் குறித்த நபர் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஹம்பரண பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திவிட்டு பின்னர் எஞ்சிய தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க