இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

உத்தேச மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

இலங்கை மின்சார ஊழியர் சங்கம், முன்னிலை சோஷலிசக் கட்சி உள்ளிட்ட 14 தரப்பினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அதனடிப்படையில் இந்த மனுக்கள் மீதான பரிசீலனை
விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த மனு மீதான பரிசீலனை நேற்றைய தினம் நிறைவடைந்த நிலையில், சட்டமூலத்தின் சட்டபூர்வத் தன்மை குறித்த உயர்நீதிமன்றத்தின் ரகசிய முடிவானது சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க