உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்வணிக செய்திகள்

விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 211 மில்லியன் ரூபா விடுவிப்பு:விவசாய அபிவிருத்தி திணைக்களம்

அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கான உரக்கொள்வனவு நிதி 211 மில்லியன் ரூபா வங்கி கணக்குகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,உர மானியத்திற்காக 7 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
உரங்களை கொள்வனவு செய்வதற்காக ஹெக்டேருக்கு 15,000 ரூபா வழங்கப்படும் எனவும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க