உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப், விநாயகபுரம் மக்கள் நீர் இன்றி கடின நிலை!

கடந்த 21 நாட்களாக நீர் இன்றி பெறும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக நுவரெலியா மாநகரசபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப், விநாயக புரம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீர் இன்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி அலையும் ஒரு கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்
இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை என இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க