சினிமாசினிமா

மூன்று நாட்களில் அரண்மனை 4 செய்துள்ள வசூல்.

அரண்மனை 4
சுந்தர் சி இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. ஏற்கனவே வெளிவந்த மூன்று அரண்மனை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெளிவந்துள்ளது.
இப்படம் வழக்கம்போல் உள்ள கதைக்களத்தை சற்று மாற்றி அமைத்து ரசிகர்கள் ஒரு நல்ல திகில் கலந்த நகைச்சுவை படத்தை கொடுத்துள்ளார் சுந்தர் சி என்பதே பெரும்பான்மையான விமர்சனமாக இருக்கிறது.

இப்படத்தில் தமன்னா, ராஷி கன்னா, விடிவி கணேஷ், கோவை சரளா, யோகி பாபு என பலரும் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்து இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் அரண்மனை 4 படம், உலகளவில் இதுவரை ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதுவே அரண்மனை 4 கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என்கின்றனர்.

கருத்து தெரிவிக்க