இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மோதர பொலிஸ் பிரிவில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச் செயல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனடிப்படையில், இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் மற்றும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்ட சந்தேகநபர் ஒருவரும் நேற்று (05) மோதர கடற்கரையில் உள்ள ரெட்பனாவத்த பிரதேசத்தில் வைத்து மோதர பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க