இலங்கைஉள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன!!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அது சவாலான விடயமாக காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தேவையான எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க