இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பண்டிகை தினங்களை முன்னிட்டு கைதிகளை பார்வையிடுவதற்காக விசேட நடவடிக்கைகள்!!

எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் ஊடக பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் ரமழான் பண்டிகையினை முன்னிட்டு இஸ்லாமிய மதக் கைதிகளுக்கு மாத்திரம் உறவினர்களை பார்வையிடுவதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்காக உறவினர்களினால் கொண்டுவரப்படும் இனிப்பு வகை உணவுகள் சுகாதார பொருட்களை தற்போதுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக பாதுகாப்பு நடைமுறைகளுடன் வழங்குவதற்காக அனைத்து சிறைச்சாலைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க