இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

மூன்று ஶ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்து

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (27.02) புறப்படவிருந்த மூன்று விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (26.02) மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை பயணிகளுக்கு அறிவித்திருந்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே உறுதிப்படுத்தினார்.

மேலும், இன்று (27.02) புறப்பட திட்டமிடப்பட்டிருந்த மேலதிக ஏழு விமானங்கள் தாமதமாகும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளதுடன்தொழில்நுட்பக் கோளாறுகளே தாமதத்திற்குக் காரணம் என்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பேச்சாளர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க