இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கார்,ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலி

தெஹிவளையில் கார் ஒன்று ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.நேற்று(21.02) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஸ்கூட்டரில் பயணித்த 52 வயதான மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்தார்

தெஹிவளை கடவத்தை வீதியின் பெரகும்பா மாவத்தையை நோக்கி செல்லும் சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து தொடர்பில்பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைகளை மேற்கொண்ட தெஹிவளை பொலிஸார் தற்போது சந்தேகத்திற்குரிய காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க