இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்

ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவர் கைது:வவுனியா

வவுனியாவில் தம்பனைச்சோலை பகுதியில் 80,000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையில் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொலிஸார் நேற்று (18.02) சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர்,மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க