இலங்கைஉள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்

கொழும்பு-முகத்துவாரம் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு – முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்றிரவு(13.02) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர்காயமடைந்துள்ளார்.

குறித்த உணவகத்தில் முகாமையாளராக பணியாற்றிய 51 வயதான ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதுடன் அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த துப்பாக்கிச்சூடு ரிவோல்வர் ரக துப்பாக்கியை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க