இலங்கைஉள்நாட்டு செய்திகள்

இலங்கையில் படுகொலைகள் : பிரதான சூத்திரதாரி தப்பியோட்டம்

பெலியஅத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்டோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் 39 வயதுடைய மனைவி எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தந்தையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹர்ஷ என்ற ஹரேந்திர குணதிலக்கவின் தலைமையில் பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரனுமான கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரான ஹரேந்திர குணதிலக்கவின் தலைமையில் இக்குற்றம் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க