இலங்கைஉள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

மட்டக்களப்பு-குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று(02.02.2024) காலை உயிரிழந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்

குறித்த ஆமை சுமார் 30 கிலோ எடை இருக்கும் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க