இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

TIN பெறுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், இது தொடர்பில் பல பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உபகரணங்கள் மற்றும் மனித வளங்கள் இல்லாமை இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

கடந்த வாரம் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆட்களை நியமிக்கவும் பல்கலைக்கழக பட்டதாரிகளை நியாயமான சம்பளத்துடன் பயிலுனர்களாக நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரி பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஆட்கள் பதிவு திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க