சினிமாசினிமா

காவல்துறைக்குக்கு நன்றி தெரிவித்த ராஷ்மிகா

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘டீப் பேக்’ எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து ராஷ்மிகா மந்தனாவும் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனிடையே, ராஷ்மிகா மந்தனா முகத்தை பயன்படுத்தி போலி வீடியோ வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்து விசாரணை நடத்தியதில், இன்ஸ்டாகிராமில் அதிமான  பார்வைகளை பெறுவதற்காக நடிகை ராஷ்மிகாவின் போலி வீடியோவை வெளியிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், போலி வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்த டெல்லி காவல்துறைக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கைது நடவடிக்கை மேற்கொண்ட டெல்லி காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க