இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பணம் தொடர்பில் வழக்கு தொடர்வதில்லை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கியப் பெருந்தொகை பணம் குறித்து வழக்கு தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2022 ம் ஆண்டின் ஜீலை மாதம் 09 ம் திகதி இலங்கை மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகபூர்வ அறைக்குள் இருந்து பெருந்தொகைப் பணம் ஆர்பாட்டகாரர்களினாள் கைப்பற்றபட்டது .
ஒருகோடி எழுபத்தி எட்டு லட்சத்து ஐம்பதினாயிரம் கைப்பற்றியதாக தெரிவித்து, ஆர்பாட்டகாரர்கள் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
பின்னர் நீதிமன்ற தலையீட்டின் காரணமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது சட்டவிரோதமான வழிகளில் பெற்ற பணமா என்பது குறித்து விசாரணைகள் நடத்தவோ,வழக்கு தொடரவோ உத்தேசம் இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க