உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜர் மாநிலத்தின் போர்கு மாவட்டத்தில் இருந்து கெப்பி மாநிலத்தில் உள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது, நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 100 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் ,அதிக சுமை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கருத்து தெரிவிக்க