இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மக்கள் VAT வரி விதிப்புக்கு எதிராக போராட வேண்டும்!

 சிங்கள தேசம் தங்களின் கதிரைகளுக்காக அடிபிடிபடுகின்றதே தவிர அப்பாவி மக்கள் நலன் தொடர்பாக பொறுப்புனர்சியற்ற நிலையில் காணப்படுகின்றனர் இந்த VAT வரி மூலம் மக்கள் கொதித்து எழும்பி போராடுவார்கள் மீண்டும் ஒரு பிரச்சினை உருவாக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் 05ம் திகதி மாலை தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலில் அன்னாரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களது போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் என சிங்கள தேசம் இந்த உலகத்துக்கு தெரிவித்துவந்த காலப்பகுதியிலே தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று சம உரிமையோடு நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நியாயப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியமையால், அவர் சிங்கள தேசத்தினால் 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சிகாலத்திலே சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மாமனிதர் குமர் பொன்னம்பலம் தாயக தேசத்திற்கு மிகப் பெரும் சொத்தாக இருந்தவர். வடகிழக்கில் இளைஞர் யுவதிகள் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்து சிறைகளிலே அடைக்கப்பட்டு மிக மோசமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்துடன் சிலர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இளைஞர்களை இலவசமாக நீதிமன்றில் வாதாடி அவர்களை மீடடெடுத்தார். அவர் சுயநலமற்ற துணித்தல் மிக்க நேர்மையான தமிழனாக இருந்த காரணத்தாலே அவர் படுகொலை செய்யப்பட்டார்
அவருடைய மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதே நேர்மையுடனும் தமிழ் தேசிய உணர்வுடனும் தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியான அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காக அவருடைய தகப்பன் வழியிலே இன்று தமிழர்களுடைய தேசத்திலே ஒரு உறுதியான தலைமைத்துவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவராக  செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்த நாட்டு மக்கள் குறிப்பிட்ட வருமானத்துக்குள் வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டிய சூழ்நிலையில் புதிதாக 18 வீதமாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு கோட்டபாய அரசை மக்கள் துரத்தியடித்தார்களே அவ்வாறு மக்கள் இந்த வற் வரி விதிப்புக்கு எதிராக  மக்கள் கொதித்து எழுந்து போராட வேண்டும்.  பாராளுமன்றம் உடன் கலைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க