இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை அணியின் 4 வீரர்களுக்கு பொலிஸ் பதவி.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு கிரிக்கெட் வீரர்கள் இன்று (06) பொலிஸ் திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

சாமர சில்வா, குசல் ஜனித் பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் அஷேன் பண்டார ஆகியோரே இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

சாமர சில்வா, குசல் ஜனித் பெரேரா பிரதான பொலிஸ் பரிசோதகர்களாகவும், நுவான் பிரதீப் மற்றும் அஷேன் பண்டார பொலிஸ் பரிசோதகர்களாகவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை காவல்துறையில் இணைந்துகொள்ளும் நான்கு கிரிக்கெட் வீரர்களுக்கு உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்கள் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க