சினிமாசினிமா

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் அன்பழகன் மரணம்

இந்த ஆண்டு கலையுலகில் உள்ள பலரையும் நாம் இழந்துவிட்டோம். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் நம் அனைவரையும் கலங்க வைத்துவிட்டு மறைந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகர் அன்பழகன் மரணமடைந்துள்ளார். இவர் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.

இந்த சீரியலில் PT வாத்தியாராக இவர் நடித்திருந்தது, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து ரெட்டை வால் குருவி, தாயுமானவன் போன்ற சீரியலில் நடித்து வந்தார்.

இவருடைய மறைவு சின்னத்திரையில் உள்ள பல நட்சத்திரங்களை அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். ரசிகர்களும், திரையுலகினரும் இவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கருத்து தெரிவிக்க