உள்நாட்டு செய்திகள்புதியவை

கோட்டாபயவின் இரட்டை குடியுரிமை வழக்கின் முழுமைத் தீர்ப்பு நாளை

கோட்டாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முழுமையான தீர்ப்பு நாளை அறிவி;க்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை நாளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்தநிலையில் மனு நிராகரிப்புக்கான காரணங்களை நாளை நீதியரசர்களான யசந்த கோத்தாகொட, அர்ஜூன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்த்தன ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க