உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அநுரகுமார திஸாநாயக்க அலரி மாளிகைக்கு செல்லவில்லை

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, அலரி மாளிகையில் சந்திப்பை நடத்தினார் என்று வெளியான செய்தியை ஜேவிபி மறுத்துள்ளது.

இது திட்டமிட்டு புனையப்பட்டது என்று ஜேவிபியின் பிரசார செயலர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சகளின் அடிவருடிகளால் இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மூன்றாவது அரசியல் சக்தியாக மாற்றம் அடைவதை பொறுக்கமுடியாத நிலையில் அவர்கள் இந்த செய்தியை பரப்பியுள்ளனர்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்காக கட்டுப்பணம் செலுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று திரும்பியபோதே விஜித் ஹேரத் இந்தக்கருத்துக்களை குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க