உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா சட்டத்தரணிகளினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

வவுனியாவில் சட்டத்தரணிகளினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்குத் துணை நின்ற பொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஷ் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் போது சட்டத்தரணிகள் தங்களது வாய்களினை கறுப்பு பட்டியினால் கட்டி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக இன்று காலையில் இருந்து ஒரு மணி நேரம் நீதிமன்றத்தின் செய்ற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க