பொன்மொழிகள்

விழிப்புணர்வுடன் வாழ்ந்து பாருங்கள்! சத்குரு ஜக்கி வாசுதேவ்

  • விழிப்புணர்வுதான் உயிரோட்டமானது. எந்த அளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்களோ அந்த அளவு உயிரோட்டமாகவும் இருக்கிறீர்கள்.
  • உயிரோடு இருப்பது வேறு, உயிரோடு வாழ்வது வேறு. ஒரு கணம், ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்புணர்வோடு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
  • ஆன்மிக வழியில் நடப்பவரும், லௌகீக வழியில் நடப்பவரும் எல்லையற்ற ஒன்றையே தேடுகின்றார். ஒருவர் விழிப்புணர்வுடன் தேடுகிறார், இன்னொருவர் விழிப்புணர்வின்றி தேடுகிறார்.
  • ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.

கருத்து தெரிவிக்க