உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மாற்றுத்தேவைக் கொண்ட முன்னாள் படையினர் சாகும்வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில்

வாழ்நாள் வேதனம் உட்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பை காட்டி வந்த மாற்று தேவைக்கொண்ட முன்னாள் படையினரில் இருவர் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று இரவு இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது இவர்களின் கோரிக்கைகளில் வாழ்நாள் வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டது.

எனினும் ஓய்வூதியத்தை கோரியே மாற்றுதேவைக்கொண்ட முன்னாள் படையினர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க