உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

பின்வாங்கினார் ரணில் – சஜித்தே ஜனாதிபதி வேட்பாளர்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுவரை கட்சி தலைமைப் பதவி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மேலும் குறைத்தல் உட்பட முக்கிய சில நிபந்தனைகளை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச இணங்கியதையடுத்தே ரணில் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றபோது, சஜித் களமிறங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சஜித்தின் பெயரை அங்கீகரிப்பதற்காகவே நாளை மறுதினம் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது என சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்து தெரிவிக்க