உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

41 மில்லியன் செலவில் மட்டு.மூக்கறையான் ஓடைப் பாலம் நிர்மாணம்

மட்டக்களப்பு கல்குடா பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கிய நீண்டகாலப் பிரச்சினைக்கு விவசாய அமைச்சினால் தீர்வு காணப்பட்டுள்ளது.

குறித்த பாலம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினால் 41 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

எதிர் வரும் 05.10.2019 ஆம் திகதி மூக்கறையன் ஓடை பாலத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.இது தொடர்பான ஆராயும் நேரடி விஜயம் இன்று காலை இன்று 20.09.2019 இடம்பெற்றது.

பாலத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில்நீரியவள அபிவிருத்தி விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நேரடி விஜயத்தில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எம்.அஸ்ஹர் செங்கலடி பொறியியளார் நிரோஷன் இபிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஜெளபர் பிரத்தியோக செயலாளர் தெளபீக்இ அக்பர்இ இணைப்பாளர் றிஸ்மின் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க