உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வத்தளையில் போலி ஆவணங்கள் தயாரித்த கும்பல் கைது

வத்தளை, கல்யான மாவத்தை பிரதேசத்தில் போலியான ஆவணங்களை தயாரிக்கும் இடம் ஒன்று நீர்க்கொழும்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, அவ்விடத்தில் இருந்து 18 போலியான அதிகாரப்பூர்வ முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போலியான ஆவணங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை, கனேமுல்ல மற்றும் மரதன்கடவல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கருத்து தெரிவிக்க