உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

போதைப்பொருள் விற்பனை செய்த இராணுவ வீரர் கைது

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்ட உடூகாவ பிரதேசத்தில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் சுமார் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய குறித்த இராணுவ வீரர் உடூகாவ ஜயவிக்கிரமபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

முல்லைத்தீவு இராணுவ முகாமில் பணிபுரியும் இவர், விடுமுறைக்காக வந்திருந்த போது இவ்வாறு கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க