உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் பகுதியில்

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தல் மற்றும் கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் 16 செப் தொடக்கம் 21 செப் வரை கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் (18.09.2019) இன்று கடற்கரை துப்பரவுசெய்யும் நடவடிக்கைகள் மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை, முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள, கரையோரம் பேனல் திணைக்களம், சமுர்த்தி திணைக்களம், மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கிராமமக்கள், என பலரும் ஒருங்கினைந்து சுத்தம் செய்யும் நடவடிக்யினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க