பொன்மொழிகள்

வார்த்தைகள்-கௌதம புத்தர்

  • சொல்லியவாறே செய்கையில் நடக்கும் ஒருவனின் ரம்மியமான பயனுள்ள பேச்சு வர்ண நிறைவுள்ள அதிக அழகானதொரு புஷ்பம், வாசனையும் பெற்றிருப்பது போன்றது.
  • வர்ண ஜொலிப்பு நிறைந்த அதி அழகான ஒரு பூ நறுமணம் பெற்றிராவிட்டால் எப்படியோ, அது போன்றது செயலில் காட்டாமல் வெறும் வாயளவில் மட்டும் மிக ரம்மியமாகப் பேசும் ஒருவனின் பயனற்றச் சொற்கள்.
  • உண்மையான பேச்சை உரைப்பவன் முரட்டுத்தனமில்லாமல் அறிவுத் தெளிவுடன் இனிமையாகப் பேசுபவன் எவனோ எவர் மனமும் புண்படாமல் பேசுபவன் எவனோ அவனே சரியான மனிதன்.

கருத்து தெரிவிக்க