உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைப்பு

ஹட்டன் – டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் மூவேந்தன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த சிவலிங்கம் உலக சைவ திருச்சபையினால் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பாடசாலைக்கு செல்லும் பாதை கொங்கிரீட் இடப்பட்டு திறந்து வைக்கப்பட்டமையும் குறிபிடத்தக்கது.

இதற்கான நிதியை அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வழங்கியிருந்தார்.

இதன்போது இரண்டு இளம் இசைக் கலைஞர்கள் அமைச்சரினால் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உலக சைவ திருச்சபையின் தலைவரும் கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தாவுமான கலாநிதி அடியார் விபுலாநந்தா, கனடா நாட்டின் பிரபல ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான சாமி அப்பாத்துறை ஆகியோரும் கலந்து கொண்டதுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க