உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஸ்ரீ .ல.சு.க.யின் மாநாடு நாளை முதல் ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட ரீதியில் மாநாடுகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதன் முதலாவது மாநாடு நாளை (15) இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாகவும் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இம்மாநாடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதில் கட்சி முக்கியஸ்தர்கள் , பிரதேச, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மாத்தளை மாவட்டத்தில் இம்மாதம் 21 ஆம் திகதியும் , 22 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்திலும், 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்து ஒக்டோபர் 6 ஆம் திகதி காலை 9 மணிக்கு காலியிலும், அதனைத் தொடர்ந்து எல்பிட்டியவிலும் இடம்பெறவுள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க