உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

19 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

பகிடிவதை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 19 மாணவர்கள் மீண்டும் இம் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மாத்தறை பிரதான நீதவான் இசுரு நெத்திக்குமார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ருகுணு பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர் ஒருவருக்கு மிக மோசமான வகையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ருகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் இரண்டாம் வருட மாணவர்கள் அடங்கலாக 19 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

[ அரச செய்தி திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க