பொன்மொழிகள்

இறைபக்தி! இராமகிருஷ்ணர்

  • எந்த வேலையாக இருந்தாலும் பலனை நாடுவதைவிட்டு, ஆசை இல்லாமல் செய்தால் இறைவனுடன் இணக்கம் வாய்க்கிறது.
  • தூய மனம், தூய பக்தி, இறைவனிடம் பிரார்த்தனை, குருவின் உபதேசம் முதலியவை பக்திக்கு மிகவும் அவசியமானவை.
  • சச்சிதானந்தப் பொருளாகிய ஈசுவரன் ஒருவரே என்ற நம்பிக்கையுடன் சாதனை புரிவோன் எவனாயினும் தான் நாடும் பரம்பொருளை அடைவான் என்பது திண்ணம்.
  • எல்லாம் ஈசுவரனுடைய கிருபையைப் பொறுத்துள்ளது. அந்த கிருபையை பெறவேண்டுமானால், நீ எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதை முழுமனதோடும் அத்தியந்தப் பிரேமையோடும் செய்.

கருத்து தெரிவிக்க