உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘கை’, ‘மொட்டு’ 3 மணிநேரம் பேச்சு – கேட்டாவும் பங்கேற்பு!

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான எட்டாம் சுற்று பேச்சு இன்று (06) நடைபெற்றது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவும் பங்கேற்றிருந்தார்.

சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற இந்த  கலந்துரையாடலில் புதிய அரசியல் கூட்டணி, பதவி பங்கீடு உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. எனினும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

குறித்த சந்திப்பு சாதகமாக முடிவடைந்தது என இரு தரப்பினரும் அறிவித்திருந்தாலும் அடுத்த சுற்றுப் பேச்சுக்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை.

 

 

கருத்து தெரிவிக்க