உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பண்ணைப் பொறுப்பாளரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மீட்பு

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள தேசிய பண்ணை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணையில் பண்ணைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டதாக வெலிக்கந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலைப் பகுதியைச் சேர்ந்த டி.எம். தர்மரெத்தின (வயது 48) என்பவரின் சடலமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் வியாழக்கிழமை காலை 05.09.2018 மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பண்ணைப் பொறுப்பாளர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாகக் கிடப்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த பண்ணைப் பொறுப்பாளர் வசம் பண்ணையைப் பராமரிப்பதற்கென்ற நோக்கத்தில் அனுமதி பெற்ற துப்பாக்கி இருந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார் என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க