உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய மற்றுமொரு தந்தை உயிரிழப்பு

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையில் காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளை உறவுகளை தேடி வடக்கு கிழக்கில் 900 நாட்களை கடந்து தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன

அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்2017.03.08 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது இன்று 912 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் நேற்று முன்தினம்(03) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனது மகன் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தனது காணாமலாக்கப்பட்ட மகனான நாகராசா நகுலேஸ்வரன் என்பவரை தேடி வந்த ஏழாம் வட்டாரம் சிவநகர் புது குடியிருப்பைச் சேர்ந்த சின்னையா நாகராசா என்ற தந்தையாரே உயிரிகாணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய மற்றுமொரு தந்தையார் முல்லைத்தீவில் உயிரழப்புழந்திருக்கிறார்

இவரோடு தமது உறவுகளை தேடி காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தை ஆரம்பித்த 900 நாட்களில் முல்லைத் தீவு மாவட்டத்தில் பதினாலாவது பெற்றோர் உயிரிழந்திருக்கிறார்கள் அத்தோடு வடக்கு கிழக்கில் 54 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்

உயிரிழந்த குறித்த தந்தையாரின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் அவரது இல்லத்தில் இடம்பெற இருக்கின்றது.

கருத்து தெரிவிக்க