உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

யாழில் வாள்வெட்டு; இருவர் படுகாயம்!

யாழ். கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பிடாரி அம்மன் கோவிலடியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் மீது நேற்றிரவு (04) 9.30 மணியளவில் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 06 பேர் கொண்ட கும்பலே வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிடாரி அம்மன் கோவிலடியில் இளைஞர்கள் கூடி நின்றபோது, அங்கு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல், இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க