உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு

தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள தகவல் அறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வு தேசோதய அமைப்பின் ஏற்பாட்டில் சர்வோதய பொது மண்டபத்தில் நேற்று காலை (4) இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய பெண்கள் இளையோர் யுவதிகள் பிரதேச நகரசபை உறுப்பினர்களை உள்ளடக்கி குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அது தொடர்பான நடைமுறை ஆலோசனைகள் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டது.

குறித்த செயலமர்வில் விரிவுரையாளராக சமூக செயற்பாட்டாளர் வினோதினி பாலசுப்பிரமணியம் அவர்களும் சர்வோதய இயக்கதின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் M.M.அன்வர் மற்றும் சக இணைப்பாளார் D.பெரமுன ஆராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்து தெரிவிக்க