உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வடக்கு நோக்கி இன்று முதல் இரண்டு தொடருந்துகள் பயணம்

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் இன்று முதல் புதிய கடுகதி தொடருந்துகள் இரண்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

4003, ஸ்ரீதேவி என்னும் பெயரிடப்பட்டுள்ள தொடருந்து பிற்பகல் 3.45 க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும்.

இந்த தொடருந்து இரவு 10.16 காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையும்.

இதேவேளை 4032 என்னும் இலக்கத்தை கொண்ட மற்றுமொரு தொடருந்து காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல்; 1.15க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இது இரவு 8.31க்கு கல்கிசை தொடருந்து நிலையத்தை சென்றடையவுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க