உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இலங்கை குடும்பத்தின் நாடு கடத்தல் வெள்ளிவரை ஒத்திவைப்பு

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையின் பிரியா- நடேஸ் குடும்பம் தொடர்;பான தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே தீர்;ப்பு இன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த வாரத்தில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த குடும்பம் நாடு கடத்தப்பட்டபோதும் நீதிமன்ற தீர்ப்பினால் இடைநடுவில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதேவேளை இந்தக்குடும்பத்தின் இளைய மகளான தர்னிக்காவின் வீசாவை நீடிப்பதன் மூலம் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க செய்யும் நடவடிக்கையை ஏற்கப்போவதில்லை என்று குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க