உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மஹேந்தினை நாடு கடத்தும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்- சிங்கப்பூர்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்கவுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் முறிவிற்பனையில 11 மில்லியன் டொலர்கள் முறைக்கேடு தொடர்பில் அர்ஜூன் மஹேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரஜையான அவர் தற்போது சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின் அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க