இலங்கை

யாழ் மாவட்டத்தில் பொதுச் சந்தைகள் திறப்பு!

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து பொதுச்சந்தைகள் அனைத்தும் மக்கள் தேவைகளுக்காக திறக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து மக்களும் வியாபாரிகளும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளுடன் செயற்பட வேண்டும் எனவும், முக்கியமாக சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக் கவசம் அணிதல் என்பன கருத்தில் கொள்ளப்பட வேண்டு்ம் எனவும் பிரதேச சபையினர் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலை மாறி சற்று இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாலேயே இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க